விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் ராமு சீதா பாலிடெக்னிக் சமுதாய மேம்பாட்டு திட்டம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் சாலைப் பாதுகாப்பு வாரவிழா நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தொடங்கி வைத்தார். பேரணி போலீஸ் நிலையத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று பாண்டியன் நகர் முக்குசாலையை சென்றடைந்தது.
பஸ் நிலையத்தின் முன்பு சாலைப் பாதுகாப்பு விதிகள் பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. விழாவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு, எஸ்.பி.எம். டிரஸ்ட் நிறுவனர் அழகர்சாமி, சமுதாய பாலிடெக்னிக் திட்ட அலுவலர் மாரியப்பன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஆனந்தகுரு மற்றும் மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.